"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
Mother - அம்மா.

Mother - அம்மா.

தாயே தரவேண்டும் எனக்கு ஒரு வரமே!


பூமி தாங்கும் முன்பே

என்னை பூவாய் தாங்கியவளே,

உருவம் அறியா கருவிலும்கூட

என்னை உருகி அணைத்தவளே,

உயிர்தந்து உடல் தந்து - இன்று

நிழலாகிப்போன என் நிஜமே.

என்னைப் பெத்தவளே பெத்தவளே

இன்று செத்தவளாய் ஆனாயே,


கூவி அழைக்க உறவுகள்

இங்கே ஆயிரம் இருந்தாலும்

என் பெயர் சொல்லியே அமைதி ஆனவளே! 

மண்ணுக்கு நடைபிணமாய் நானிருக்க

நீ விண்ணிற்கு விடைப்பெற்று சென்றாயே,

தாயே தரவேண்டும் நீ எனக்கு ஒரு வரமே -உன்

மணி வயிற்றில் ஜனிக்க வேண்டும் இக்கணமே.

"மகனே" என அணைக்க வேண்டுமம்மா

என்னை மீண்டும் ஒரு தடவை உன் கரமே!...

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்